யாழில் கஞ்சா கலந்த மாவாவுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் நாவாந்துறை – மண்பிட்டி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 470 கிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.