யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த உக்குபண்டாகே ஜயரத்ன (64வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்