
யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர் -பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை ராசலிங்கம் (69 வயது) எனவும் தெரியவருகிறது.
வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த போது யானை தாக்கியதாக தெரிய வருகின்றது.
விசாரணைகளை மூதூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
