மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் கைது
-யாழ் நிருபர்-
யாழ் . சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவரை மானிப்பாய் பொலிஸார்
இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரும், ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய, மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.