மோடி மிகவும் நல்லவர் -டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த ட்ரம்ப் “தான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி மீது தனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு என்றும் தங்களுக்கு ஒரு சிறந்த உறவு இருக்கிறது. பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். இருப்பினும்
சற்று கடினமானவர் என்றும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார் .
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரின்போது, நீங்கள் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கினால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என கூறினேன்.
நான் சொன்ன இரண்டு நாள்களுக்குள், மோடியும், ஷெரீப்பும் தன்னிடம் பேசி போரை நிறுத்தினர்” எனடொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும் இந்த போரில் 7 புத்தம் புதிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும் அது இந்தியாவின் போர் விமானமா? பாகிஸ்தானின் போர் விமானமா? என்று குறிப்பிடவில்லை .
