மூதூர் பேருந்து விபத்து : காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மூதூரில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கைப் பாலத்துக்கு அருகே இந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் அதில் பயணித்த 64 பேர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மூதூர் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்