மூதூர் தள வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்!

-மூதூர் நிருபர்-

மூதூர் -கங்கைப் பாலத்தருகில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று சனிக்கிழமை பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் மானிப்பாயிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பஸ் வண்டி மூதூர் -கங்கை பாலத்தருகில் தடம் புரண்டு நேற்று விபத்துக்குள்ளானதில் 52 பேர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டதோடு வைத்தியசாலை நிர்வாகத்தோடு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்