முல்லைத்தீவில் யானைகள் அட்டகாசம்

முல்லைத்தீவு – விசுவமடு பகுதியிலுள்ள கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் சேதப்படுத்தி நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று புதன் கிழமை நள்ளிரவு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 03 யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து அறுவடை செய்யும் தருவாயில் இருந்த தர்பூசணிகள் மற்றும் 100இற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் என்பனவற்றை சேதமாக்கியுள்ளன.

மேலும், நீண்டகாலமாக அப்பகுதியில் யானைகள் தமது வாழ்வாதாரங்களை அழித்து வருவதாகவும் யானை வேலிகள் அமைக்கும் பணிகள் பூர்த்தியாகாத நிலையில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து தமது பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருமாறு கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்