முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
உணவகத்திற்கு பின்பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆசீர்வாதம் (வயது-49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்