மீண்டும் நாட்டில் கொரானா
கொரோனா வைரஸ் தீவிரமடைந்து கடற்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசித்த வயது 56 உடைய பெண் ஒருவரும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசித்த வயது 73 உடைய ஆணும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பெண் கடந்த 27ம் திகதி ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் (28) உயிரிழந்ததாகவும், மற்றுமொரு நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
மீண்டும் கொவிட் தொற்றுநோய் நாடு முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக முககவசம் அணிந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் பொருத்தமானது என்றும் மரண பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்