மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள காலணி வவுச்சர்கள்: கல்வி அமைச்சர்

மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்ய ரூ.3000 மதிப்புள்ள வவுச்சர்கள் 800,000 பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் எனவும் அடுத்த வருடம் இது மேலும் அதிகரிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் அறிக்கை ஒன்றில் அமைச்சர் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

மேலும் அடுத்த வருடம் முதல் பாடசாலை அமைப்பில் பல மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள காலணி வவுச்சர்கள் கல்வி அமைச்சர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்