மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

பெரியநீலாவணை பகுதியில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைபொருள் வியாபாரி தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய ஜே.எஸ். கே. வீரசிங்க தலைமையிலான குழுவினரின் விசேட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து ஒரு தொகை ஐஸ் போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் கைதானவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸாரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்