மரம் வீழ்ந்ததில் பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி, கஹவத்தை ஓபாத இலக்கம் 3 பகுதியில் மரம் வீழ்ந்ததில் பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இரு பெண்கள் காயமடைந்துள்ளதோடு,  ஒரு பெண் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு பெண் தீவிர சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்