மது போதையில் பேருந்தை செலுத்திய ஓட்டுநர் கைது!

மது போதையில் பேருந்தை செலுத்திய ஓட்டுநர் ஒருவர் பண்டாரகம கெலனிகம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தின் போது பேருந்தில் 50க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை – ஹொரண பகுதிக்கு செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்தனர்.

இந்த பேருந்து பாதுகாப்பற்ற வகையில் பயணிப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.