மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடக்கு மாகாணம் , அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.