
மட்டக்களப்பு வைத்தியசாலையில் 7 வயது சிறுமி மரணம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
தரம் 2 இல் கல்வி கற்று வந்த டினேஸ் பேனிஸா (வயது – 7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரத பரிசோதனைகளின்படி சிறுமியின் இரத்த குழாய்கள் செயல் இழந்தமையே குறித்த சிறுமியின் மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
