மட்டக்களப்பில் தொடரும் முதலைகள் அச்சம் : மற்றுமொரு சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் இன்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான வி.கிருஸ்ணதீபன் (வயது – 26)
என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மந்திரியாறு நீரோடை பகுதியில் நேற்று முன் தினம் மாலை மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த நபரை முதலை இழுத்துச்சென்றுள்ளது.

மேலும் குறித்த நபரை இருதினங்களாக தேடிய நிலையில் இன்று வியாழக்கிழமை இடுப்பின் கீழ்பகுதி இல்லாத நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.