மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு!

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டு மாநகர சபை முதல்வர் தெரிவு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு அஸ்மி தலைமையில்,  மாநகர சபை சபா மண்டபத்தில், இன்று புதன்கிழமை காலை 08.40 மணிக்கு இடம்பெற்றது.

மட்டு மாநகர சபை முதல்வர் பதவிக்காக, சிவம் பாக்கியநாதனை, இலங்கைத் தமிழரசுக்கட்சி உறுப்பினர் மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் வழி மொழிந்தார்

முதல்வர் பதவிக்காக வேறு தெரிவுகள் இன்மையால், சிவம் பாக்கியநாதன் ஏகமனதாக முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News