மட்டக்களப்பு நகர் புறங்களில் குரங்குகளின் தொல்லை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதியிலும் போன்ற பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள் உட்புகுந்து பயன்தரும்  மா, தென்னை, வாழை, உள்ளிட்ட பல்லாண்டுப் பயிரினங்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில அப்பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள கத்தரி, வெண்டி, புடோல், மிளகாய், உள்ளிட்ட பல மேட்டு நிலப் பயிரினங்களையும் இவ்வாறு குரங்குகள் அழித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே குரங்குத் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்