மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து ஆணின் சடலம் காயங்களுடன் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ரவி என அழைக்கப்படும் அண்ணாமலை ரவீந்திரன் (வயது – 62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதுடன் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் சம்பவதினமான இன்று காலை வீட்டின் முன்பகுதி வாசல் கதவில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்ட நிலையில் தடவியல் பிரிவு பொலிஸாரை வரவழைத்ததுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.