மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகி அம்மனின் தைக்குளிர்த்தி சடங்கு

மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகி அம்மனின் தைக்குளிர்த்தி சடங்கு நேற்று செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் இடம்பெறும் பிரதான சடங்குகளில் ஒன்றான தைக்குளிர்த்தி சடங்கு நேற்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வருடாவருடம் தைப்பொங்கல் தினத்தில் மாலைவேளையில் நெல்லுக்குற்றுதல் பூஜையுடன் ஆரம்பமாகி விநாயகர்பானை வைத்தல், அம்மன் குளிர்த்திப்பாடல் பாடுதல் போன்ற பாரம்பரிய பத்ததி முறைப்படி அம்மனின் திருக்குளிர்த்தி இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

இச் சடங்கு பெருவிழாவானது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆலய கட்டாடியார் தேவராசா ஐயாவினால் பூஜை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.