
மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதியோர் சங்க தலைவர்களுக்கு கௌரவிப்பு இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் சிவநாதன் சிராணி கலந்துசிறப்பித்தார்.
