மட்டக்களப்பு-ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் இருந்து புதைக்கபட்டிருந்த நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன
குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக, பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நீதிமன்ற உத்தரவை பெற்று, பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் , இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து, இன்று செவ்வாய்க்கிழமை காலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் ஆகழ்வு பணி இடம்பெற்றது.
இதன்போது புதைக்கபட்டிருந்த நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.