மட்டக்களப்பில் முதலையால் இழுத்துச்செல்லப்பட்ட மீனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் முதலையால் இழுத்துச்செல்லப்பட்ட மீனவர் சடலமாக மீட்பு – மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதலை கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரை முதலை பிடித்துச் சென்ற நிலையில் அவரை தேடும் பணியில் மீனவர்கள், பொலிஸார், சுழியோடிகள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் இன்று ஆற்றிலிருந்து தலை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.