மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் நினைவேந்தல்

தராகி என்று உலகளவில் பேசப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் நினைவு தினம் இன்று சனிக்கிழமை காலை 9.00மணிக்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

.மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தொழில் சார் ஊடக சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்து நடத்தி இருந்தனர்

இதன்போது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான ஊடக அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்