மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தது.
இன்று காலை 10.00 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஶ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், முன்னாள் முதல்வர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஸ்னபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்