மட்டக்களப்பில் ஆண் சிசுவின் சடலமாக மீட்பு : படங்கள் இணைப்பு

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் சிசுவின் சடலமாக இன்று சனிக்கிழமை காலையில் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் குழந்தையை உரைப்பையில் கட்டி அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 9.00 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவிததுள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்று சிசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் ,குழந்தையை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக பொலிசார் தெரிவித்தனா.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க