போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞன் கைது

-யாழ் நிருபர்-

யாழில் நேற்று வெள்ளிக்கிழமை 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளான்.

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று நடைபெற்றது. குறித்த பகுதிக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.