போதை மருந்துக்காக குழந்தையை விற்ற தாய்
பராகுவே நாட்டில் போதை மருந்துக்காக தாய் ஒருவர் தனது மகளை இளைஞர் ஒருவருக்கு விற்ற நிலையில் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
போதை பழக்கத்திற்கு அடிமையான (வயது – 42) ஆரேலியா சலினாஸ் என்ற பெண் போதை மருந்து வாங்க பணம் இல்லாததால் தனது 3 வயது மகளை பெட்ரோ ஜுவான் என்ற இளைஞருக்கு 10 பவுண்டுக்காக விற்றுள்ளார்.
இளைஞர் சிறுமியை வாங்கி சென்ற 24 மணி நேரத்தில் வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் சடலத்தை பார்த்த சிலர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் குறித்த சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்