போதைப்பொருளுடன் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

பதுளை பகுதியில் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவின் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளனர்.

திவுலபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீரிகம பகுதியைச் சேர்ந்த 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் சில காலம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் கடந்த 15 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு திரும்பவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்