பொது இடத்தில் உறவுக்கு அழைத்த காதலன் : மறுத்த காதலிக்கு நேர்ந்த பரிதாபம்!

உறவுக்கு வர மறுத்த காதலியை கொலை செய்ய முயன்ற காதலனை பொதுமக்கள் பிடித்து அடித்த சம்பவம் ஒன்று இந்தியா-மும்பையில் இடம்பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த லுப்னா ஜாவேத் சுக்தே (28) என்பவர் ஆகாஷ் முகர்ஜி (22) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில்,  இவர்கள் இருவரும் மும்பை,  பாந்த்ராவில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அன்று ஆகாஷ் முகர்ஜிக்கு பிறந்தநாள். இதனால், கடற்கரையில் அலையின் அழகை பார்த்துக் கொண்டு லுப்னாவிடம் ஆகாஷ் நெருக்கமாக இருந்துள்ளார்.

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொது இடத்தில் உறவு வைத்துக் கொள்ள ஆகாஷ் முயன்றபோது அதை லுப்னா மறுத்துள்ளார்.

மீண்டும், மீண்டும் ஆகாஷ் வற்புறுத்த லுப்னா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் லுப்னாவின் தலைமுடியை இழுத்துப் பிடித்து பாறையில் மோதியுள்ளார். ஆகாஷ் தாக்கியதில் லுப்னாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதனையடுத்து, லுப்னாவை தரதரவென இழுத்துச் சென்ற ஆகாஷ் கடல் தண்ணீரில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்துள்ளார்.

வலி தாங்க முடியாமல் லுப்னா அலறி கத்தி கூச்சல் போட்டுள்ளார். இவரின் அலறலைப் பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து ஆகாஷை அடித்துள்ளனர்.

இதனையடுத்து, ஆகாஷிடமிருந்து லுப்னாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ஆகாஷை கைது செய்தனர்.