பேருந்து விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்
நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை காலை 7 மணியளவில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள், ஐந்து பயணிகள் மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்