பெலியத்த நுழைவு பகுதியில் ஐவர் சுட்டுக் கொலை : மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த நுழைவு பகுதியில் கடந்த வாரம் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 33 வயதுகளையுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ரத்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்