
பெண் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம்
பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்கள் பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றன.
இங்கு உள்ள பெற்றோர், பெண் பிள்ளைகள் இறந்தால், அவர்களின் கல்லறைக்கு பூட்டு போடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிணங்களை கூட பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர நிகழ்வுகள்தான் இந்த சூழலை உருவாக்கியுள்ளது என பாகிஸ்தான் நாளேடான டெய்லி டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உகாரா எனும் இடத்தில் 2020ஆம் ஆண்டு பெண் பிணத்தை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைதுசெய்யப்பட்டார். குலாமுல்லா என்னும் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 2021ஆம் ஆண்டில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட இரவே 18 வயது பெண்ணின் பிணம் பாலியல் கொடுமைக்கு ஆளானது. இவ்வாறு பட்டியலிட்டு கூறும் அளவுக்கு பாகிஸ்தானில் பிணங்களை பாலியல் கொடுமை செய்வது அதிகரித்துள்ளது. இதனால் பெண்களின் கல்லறைகளுக்கு இரும்பு கம்பிகளை கொண்டு கதவமைத்து பூட்டி வைக்கின்றனர் அந் நாட்டு மக்கள்.
மேலும் மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம் பாகிஸ்தானில் 40 சதவீத பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக கூறுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்