பெண்கள் சுகநல நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்-

சிவபூமி அறக்கட்டளை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துபீட இணைந்து உருவாக்கியுள்ள பெண்கள் சுகநல நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வானது இன்று ஞாயிற்று கிழமை யாழ் சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்றது

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ஆர்.கே.கனகேஸ்வரன் கலந்து கொண்டு உத்தியோகபூர்வ பெண்கள் சுகநல நிலையத்தினை திறந்து வைத்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய சி.சிறிதரன், ஆ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ந.சரவணபவா, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண போதனா பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ.பற்குணராஜா, யாழ்ப்பாண மருத்துவபீட பேராசிரியர் இ.சுரேந்திரகுமார், வைத்திய நிபுணர்கள், புலம்பெயர்ந்து வாழும் தனவந்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்