புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார்.

அதைத் தொடர்ந்து சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க அவரது பெயரை வழிமொழிந்தார்.