பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்ற மனைவி மீது கணவன் தாக்குதல்

நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று கம்பளை மரியாவத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கம்பளை கொஸ்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பெண் இன்று வியாழக்கிழமை காலை தனது இரு குழந்தைகளையும் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றில் குறித்த நபர் அவரது மனைவிக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், அதை வழங்காது தவிர்ப்பதற்காகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்