
பிரிட்டன் பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரிட்டனில் ஜூலை 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை பிரிட்டனில் அமைச்சரவை கூடியது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ரிஷி சுனக்இ ஜூலை 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியும் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூர் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றது.
அத்துடன் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
