பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாக்குதலுக்குள்ளான மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவியின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது பெண் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு, சில மாணவிகள் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து மற்றும் பொலிஸார் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்