
பாக்கிஸ்தானில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 63 உயிரிழப்பு ?
பாக்கிஸ்தானில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக 14 பேர் பலியாhகியுள்ளனர் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர், நான்கு நாட்கள் தீவிர வானிலையில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 63 ஆக உள்ளது.
பாகிஸ்தானில், பெரும்பாலான மரணங்கள் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பதிவாகியுள்ளன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 15 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 32 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் குர்ஷித் அன்வர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபின் கிழக்கு மாகாணத்தில் 21 பேர் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக தரவுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நாட்டின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான், திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்;துள்ளனர்.
புதனன்று, பலுசிஸ்தானில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இடையே அதிக மழை பெய்து கொண்டிருந்தது, திடீர் வெள்ளம் கடலோர நகரமான குவாடருக்கு அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடித்தது.
காஷ்மீரின் சர்ச்சைக்குரிய இமயமலைப் பகுதியிலும் கனமழை பெய்தது. தலைநகர் கராச்சி உட்பட பல பகுதிகளில் பலத்த கனமழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
