பாகிஸ்தானுடன் மூன்றாவது நாளாக மோதலில் ஈடுபடும் இந்தியா

இந்திய – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே இந்திய இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்தப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்திய இராணுவம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியாவின், காஷ்மீர் – பஹல்காம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதையடுத்து இந்திய இராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.