பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் முக்கிய அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி-1 இல் கசிந்துள்ள மூன்று கேள்விகளுக்கு முழு புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடத்தப்பட்ட பரீட்சை நிலையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.