
பப்புவா நியூ கினியில் பாரிய மண்சரிவு : 100 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்
பப்புவா நியூ கினி – போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 100 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தில் அருகிலிருந்த மலைப்பகுதி சரிந்து வீழ்ந்தமையால் வீடுகள் தரைமட்டமாகியதாக, கெரா பெண்கள் சங்கத்தின் தலைவர் எலிசபெத் லாருமா தெரிவித்துள்ளார்.
மண்சரிவினால் பெரிய தங்கச் சுரங்கம் அமைந்துள்ள போர்கெரா நகருக்கான வீதியும் தடைபட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்