பதிவு செய்யப்படாத மசாஜ் நிலையங்கள் : 5 ஆயிரம் இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்

SPA என்ற பெயரில் நடத்தப்படும் மசாஜ்  நிலையங்களில்  இலங்கையில் சுமார் 50,000 இளைஞர்கள் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவல்கள் நேற்று வியாழக்கிழமை  ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டன.

நாடு முழுவதும் சுமார் 6,000 SPA  நிலையங்கள் உள்ளதாக ஆயுர்வேத இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த மையங்கள் ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்