காதலிக்க மறுத்த சிறுமியை பட்டபகலில் குத்தி கொலை: வேடிக்கை பார்த்த மக்கள்
இந்தியாவில் டெல்லி ரோகினி பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சாக்ஷி என்ற 16 பெண்ணைஇ இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இருக்கும் நிலையில் வழிமறித்து கொலை செய்துள்ளார்.
20க்கும் மேற்பட்ட தடவை கத்தியால் குத்தியும், கால்களால் மிதித்தும் தனது கோபத்தினை காட்டிய நபர் மேலும் கோபம் தீராததால் ஆத்திரத்தில் உச்சததிற்கே சென்று கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
குறித்த பெண் தாக்கி கொலை செய்யப்படும் போது பயத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் அப்பெண்ணை காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணின் சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணை நடாத்தியதில் உயிரிழந்த சிறுமிக்கும் குறித்த நபருக்கும் 3 வருட பழக்கம் இருந்ததுடன் தன்னை காதலிக்க மறுத்ததால் தான் அவரை கொலை செய்ததாகவும் இதில் தனக்கு எவ் வித வருத்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளான்.
மேலும் இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்