படகு விபத்து: 90 பேர் பலி

மொசாம்பிக் கடற்பரப்பில் படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்புலா மாநிலத்தில் உள்ள தீவுக்கு அருகிலேயே குறித்த மீன்பிடி கப்பல் இவ்வாறு நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதேவேளை அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்