படகு கவிழ்ந்து இளைஞன் பலி
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளான படகின் இன்ஜினை பழுதுபார்க்க சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
