பசளை ஏற்றிச் சென்ற பார ஊர்தி குடைசாய்ந்து விபத்து

-மூதூர் நிருபர்-

 

திருகோணமலை , கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 86 ஆம் மைல் கட்டை பகுதியில், பார ஊர்தி ஒன்று குடைசாய்ந்ததில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி, கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பார ஊர்தி கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பசளை ஏற்றிச் சென்ற போது, இன்று புதன்கிழமை காலை குடைசாய்ந்ததாகவும், சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே இந்த விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்