நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞர்களின் முன்மாதிரியான செயல்

-யாழ் நிருபர்-

அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு வவுனியா – மன்னார் வீதியின் சில பகுதிகளில் மண் சட்டி மற்றும் சிரட்டைகளைப் பயன்படுத்தி இளைஞர்களினால் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தண்ணீர் தொட்டிகளை அமைத்து இந்த வெப்பகாலத்தில் பறவைகள், விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் உன்னத கடமையில் குறித்த இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்