நீர்வழங்கல் அதிகார சபையினருக்கு மக்கள் பாராட்டு

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் பிரதான நீர்க்குழாயில் நீர்க்கசிவு நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்டுள்ளது.

இதனை அவதானித்த பிரதேச மக்கள் நீர்வழங்கல் அதிகார சபையினருக்கு வழங்கிய தகவலில் பிரகாரம் அங்கு உடனடியாக விரைந்த அதிகாரிகள் அதனை திருத்தியமைக்கு பணியை ஆரம்பித்தனர்.

இவ்வாறு சிறப்பாக பணியாற்றி நாட்டின் பெறுமதியான வளமான நீர்வளம் பாதுகாக்கப்பட்டு வீண்விரமாதலை தடுக்க சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.